January 24, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வு குறித்து நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அரசு பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி தமிழக அரசு
(ஜன 19)உத்தரவிட்டுள்ளது.ஆறு ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வால்
பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வு குறித்து நடிகர் கமல் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்
“பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள், அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே…!” என குறிப்பிட்டுள்ளார்.