• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடும்ப கவுரவத்தை காப்பாற்றவே கொலை செய்ததாக குவாண்டீசின் சகோதரர் வாக்குமூலம்.

July 19, 2016 தண்டோரா குழு

சர்ச்சையான வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த பாகிஸ்தான் மாடல் அழகி குவாண்டீல் பலூச் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு நடந்த இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தினால் அந்த அணியின் கேப்டன் அஃப்ரிடிக்கு தன்னுடைய நிர்வாண வீடியோவை அனுப்பி வைப்பேன் என்று பாகிஸ்தான் மாடல் அழகி குவாண்டீல் பலூச் அறிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பு செய்தித்தாள்களிலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இதனால் கோபம் கொண்ட அவர் பாகிஸ்தான் வீரர்களைத் திட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

பின்னர், ஒரு படி மேலே சென்று இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலியைக் காதலிப்பதாக அறிவித்தார். தன்னுடைய ஒவ்வொரு அறிவிப்புகளின் மூலமும் ஊடகங்களின் கவனத்தை பெற்ற அவர் சர்ச்சையாக எதையாவது செய்துகொண்டே இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

மேலும், சமீபத்தில் இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்த மதகுரு ஒருவருடன் செல்ஃபி எடுத்து அதனைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இதன் மூலம் அந்த மதகுரு மத நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், முல்தானில் உள்ள அவரது வீட்டில் குவான்டீல் பலூச் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். குவான்டீலை அவரது சொந்த சகோதரரே சுட்டுக்கொன்றதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மாடலிங் தொழிலை விட்டுவிடுமாறு அவர் கூறியதாகவும், குவான்டீல் மாடலிங்கை விடாததாலும் அவரைச் சுட்டுக்கொன்றதாகவும் கூறப்பட்டது. ஆனால், அவர் சுட்டுக் கொல்லப்படவில்லை என்ற செய்தி தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, குவாண்டீசின் சகோதரர் வாசீம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், குடும்ப கவுரத்தை பாதுகாக்கவே தன் தங்கையைக் கொலை செய்ததாகவும் அவளுடைய செயல்பாடுகள் எங்கள் குடும்ப கவுரத்தைக் களங்கப்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், அவளுக்குத் தூக்க மாத்திரை கொடுத்தேன். மாத்திரையை உட்கொண்ட அவர் மயங்கி விழுந்தாள். பிறகு அவளின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

அதே சமயம், தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்றும், தன்னுடைய அலைபேசியில் தனக்கு மிரட்டல் வருவதாகவும், தன்னுடைய வீட்டில் பாதுகாப்புக்கான கருவிகள் இல்லாததாதல் தனக்குப் பாதுகாப்பு தரவேண்டும் என்றும் சில நாட்களுக்கு முன், இஸ்லாமாபாத் உள்துறை அமைச்சராக இருந்த மத்திய புலனாய்வு ஆணைய(FIA) இயக்குனர் ஜெனரல் அவர்களுக்கு குவாண்டீல் பலூச் கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க