• Download mobile app
16 Apr 2024, TuesdayEdition - 2988
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காண்ட்ராக்ட் வேலை செய்த பணத்தைக் கொடுக்க லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது.

July 20, 2016 வெங்கி சதீஷ்

மேட்டுப்பாளையம் நகராட்சியில் பல்வேறு பணிகளைச் செய்து வருபவர் ஆனந்தன். இவர் கடந்தமுறை ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டார். அதற்காக நகராட்சி இவருக்கு சுமார் 3 லட்சம் ரூபாய்வரை கொடுக்கவேண்டியது இருந்தது.

இந்நிலையில் முதல்கட்டமாக 70 ஆயிரம் ரூபாயைக் கொடுத்த நகராட்சி ஆணையாளர் மல்லிகை, மீதி பணத்தை தரவேண்டும் என்றால் லஞ்சம் தரவேண்டும் எனப் பேரம் பேசியுள்ளார்.

பின்னர் முதல்கட்டமாக 5 ஆயிரம் ரூபாயைத் தருமாறு வற்புறுத்தியுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத ஆனந்தன் இது குறித்து கோவை லஞ்சஒழிப்புத்துறைக்கு அத்தகவல் கொடுத்தார்.

பின்னர் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய நோட்டுக்களைப் பெற்றுச்சென்ற ஆனந்தன் இன்று காலை மல்லிகையிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு டி.எஸ்.பி முருகேசன் தலைமையில் மறைந்திருந்த லஞ்சஒழிப்பு காவல்துறையினர் மல்லிகையை கையும் களவுமாகப் பிடித்தனர். பின்னர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்த லஞ்சஒழிப்பு காவல்துறையினர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க