• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பத்திரிகையாளர்கள் பேருந்து மீது தாக்குதல். 3 பேர் காயம்

August 10, 2016 தண்டோரா குழு

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த செய்திகளை சேகரிப்பதற்காகப் பத்திரிகையாளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் 3 பத்திரிகையாளர்கள் லேசான காயமடைந்துள்ளனர்.

ரியோ டி ஜெனீரோ நகரில் ரியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 25,000 பத்திரிகையாளர்கள் ஒலிம்பிக் செய்திகளை சேகரிப்பதற்காக அங்கு முகாமிட்டுள்ளனர்.

இவர்களில் கூடைப்பந்து போட்டிகள் நடந்த இடத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியின் தலைமை பூங்கா அமைந்துள்ள இடத்துக்குப் பத்திரிகையாளர்களின் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் 2 ஜன்னல்கள் பலத்த சப்தத்துடன் உடைந்து நொறுங்கின.இதில் 3 பத்திரிகையாளர்கள் லேசான காயமடைந்து உள்ளனர்.

பத்திரிகையாளர்கள் பயணித்த பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒலிம்பிக் நிர்வாகமோ பேருந்து மீது விஷமிகள் கற்களை வீசியதாகத் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பிரேசில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரியோ ஒலிம்பிக் போட்டியில் நடத்தப்பட்டுள்ள 2-வது தாக்குதல் சம்பவம் இது. கடந்த வாரம் சைக்கிள் போட்டிகளின் போது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால் பிரேசில் முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க