• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

Blue Whale விளையாட்டால் தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவன்

August 11, 2017 தண்டோரா குழு

மத்தியபிரதேசத்தில் ஆபத்தான Blue Whale விளையாடிய பள்ளி மாணவன், தற்கொலை செய்துக்கொள்ள முயன்றுள்ளான்.

மத்திய பிரதேஷ் மாநிலத்தின் இந்தூர் நகரிலில் 7ம் வகுப்பு மாணவன் ஒருவன்,ஆபத்தான Blue Whale விளையாடியுள்ளான். அந்த விளையாட்டை சுமார் 50 நாட்கள் விளையாட வேண்டும். அந்த விளையாட்டின் இறுதியில் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்பது அந்த விளையாட்டின் விதியாகும்.

மேலும் அந்த மாணவன், அவனுடைய தந்தையின் கைபேசியில் அந்த விளையாட்டை விளையாடியுள்ளான். 50வது நாளின் முடிவில், அவனுடைய பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளான். அதிர்ஷ்ட வசமாக, அவனை சரியான நேரத்தில் கவனித்த அந்த பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர், அவனை காப்பற்றியுள்ளார்.

இந்த தகவலை அறிந்த இந்தூர் காவல் துறையினர், சம்பவம் நடந்த பள்ளிக்கு விரைந்தனர். அந்த மாணவனின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அந்த மாணவனும் அவனுடைய நண்பர்களும் அவன் Blue Whale விளையாடியது குறித்து தெரிவித்துள்ளனர்.

அதை விளையாடுவோர், அதன் ஒவ்வொரு நிலையை முடித்த பிறகு, கூர்மையான கருவியால் தங்கள் கைகளில் வெட்டு காயத்தை ஏற்படுத்த வேண்டும், 50 நாட்களில் 50 வெட்டு காயங்கள் இருக்க வேண்டும் என்பது அந்த விளையாட்டின் மற்றொரு விதியாகும். ஆனால், அந்த மாணவனின் கையில் அது போன்ற வெட்டு காயம் இல்லை. தங்கள் மகன் இவ்வளவு ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறான் என்று அவனுடைய பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும்,இந்த விளையாட்டால், உலகம் முழுவதிலும் சுமார் 100 பேர் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க