• Download mobile app
02 Jul 2025, WednesdayEdition - 3430
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போலீசாரை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடிகட்டி போராட்டம்

November 13, 2017 தண்டோரா குழு

திருச்சி அருகே போலீசாரை கண்டித்து கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த த.முருங்கப்பட்டியில் இயங்கிவந்த தனியார் வெடிமருந்து ஆலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கிராம மக்கள் ஆலையை மூடக்கோரி பலகட்ட போராட்டங்கள் நடத்தினர்.

பின்னர் அந்த வெடிமருந்து ஆலை மூடப்பட்டு அதன் உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்டனர். மேலும் விபத்தில் பலியானவர்களுக்கு அரசு நிதி உதவியை வழங்கியது. இந்நிலையில் கடந்த வாரம் மீண்டும் ஆலைக்குள் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கட்டுமான பொருட்களை ஏற்றி சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்தியதாக கூறி 7 பேரை உப்பலியபுரம் போலீசார் கைது செய்தனர்.

இதைதொடர்ந்து போலீசாரை கண்டித்து இன்று முருங்கப்பட்டியில் கிராமத்தில் கடைகள் மற்றும் விடுகளில் கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள் பேராட்டம் நடத்தி வருகின்றனர்.மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கைது செய்யபட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என மனு அளித்தனர்.இப்போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க