• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்து முன்னணியை தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தல்

October 1, 2016 தண்டோரா குழு

கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கடந்த 22ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். அவரது உடல் கோவை துடியலூர் பகுதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

ஊர்வலமாக வந்த போழுது துடியலூர் பகுதியில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இதில் போலீஸ் வாகனம், 2 கடைகள் எரிக்கப்பட்டது மற்றும் பல கடைகள் மர்ம கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக 500க்கும் மேற்பட்றோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை செய்தியாளர் மன்றத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைப்பெற்றது .அதில் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பின்னர் பேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் ,

சசிகுமார் கொலையை தொடர்ந்து கோவையில் இருக்கும் முஸ்லீம்களின் நிறுவனங்கள் தாக்கப்பட்டன. சுமார் 5 கோடி அளவு இழப்பீடு ஏற்பட்டுள்ளது.இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் முழுமையாக கைது செய்யவில்லை. தொடர்ந்து பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்
நடைபெற்று வருகிறது. வன்முறைக்கு காரணமான இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க