• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூரு, ஓசூரில் தொடர் மழை ஒசூரு பள்ளிகளுக்கு விடுமுறை

July 29, 2016 தண்டோரா குழு

கடந்த மூன்று நாட்களாக ஓசூரு, கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காமராஜ்நகர் ஏரி உடைந்ததால் அப்பகுதி முழுவதும் நீரில் மூழ்கியது.

இதில் ஏற்கனவே மூன்றுபேர் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை மேலும் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது யார் எனத் தெரியாமல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்துகொண்டே இருந்ததால் ஓசூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவு பிறப்பித்தார்.

அதே சமயம் நேற்று இரவு முதல் பெங்களூருவிலும் கனமழை பெய்து வருவதால் அங்கும் சாலைகள் முழுவதும் நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் நீர் வீடுகளைச் சுற்றி நிற்பதால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் தற்போது வீரச்சந்திரா ஜங்ஷன் மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய இடங்களுக்குள் நீர் புகுந்துள்ளது. இதற்கு அருகில் உள்ள ஏரி நிரம்பியதே காரணம் எனக் கண்டறியப்பட்டு விரைவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என பெங்களூரு மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க