• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடிகர் கமலஹாசனின் உருவப்படத்தை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

January 6, 2018 தண்டோரா குழு

கோவையில் நடிகர் கமலஹாசனின் உருவப்படத்தை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் இன்று(ஜன 6)ஈடுப்பட்டனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக கூறி கோவையில் நடிகர் கமலஹாசனின் உருவப்படத்தை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் தொடர் எழுதி வருகிறார்.இதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் டிடிவி தினகரன் ஆதரவு வழக்கறிஞர் பிரிவினர் கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கண்டன முழக்கங்களை எழுப்பிய வழக்கறிஞர்கள் கமலின் உருவப்படத்தை தீயிட்டு எரித்தனர்.மேலும்,நடிகர் கமல் தன் நடிப்பு தொழிலை மட்டும் பார்க்க வேண்டும் எனவும் அரசியல் குறித்து அவதூறு பரப்பக் கூடாது என வலியுறித்தினர்.

மேலும் படிக்க