• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிய விளையாட்டு போட்டி வெண்கல பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ 20 லட்சம் பரிசு – முதலமைச்சர் பழனிசாமி

September 1, 2018 தண்டோரா குழு

ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஆடவர் பாய்மர படகு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் வருண் தக்கார்,கணபதிக்கு ரூ.20 லட்சம் ஊக்கப்பரிசு வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர் பாய்மர படகு போட்டியில் வருண் தாகுர்,கணபதி செங்கப்பா ஆகியோர் கலந்துக் கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றனர்.இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 14 தங்கம்,23 வெள்ளி,29 வெண்கலம் என 66 பதக்கங்களை வென்று இந்தியா பதக்கப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஆடவர் பாய்மர படகு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் வருண் தக்கார்,கணபதிக்கு ரூ.20 லட்சம் ஊக்கப்பரிசு வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க