• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிய விளையாட்டு போட்டி வெண்கல பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ 20 லட்சம் பரிசு – முதலமைச்சர் பழனிசாமி

September 1, 2018 தண்டோரா குழு

ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஆடவர் பாய்மர படகு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் வருண் தக்கார்,கணபதிக்கு ரூ.20 லட்சம் ஊக்கப்பரிசு வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர் பாய்மர படகு போட்டியில் வருண் தாகுர்,கணபதி செங்கப்பா ஆகியோர் கலந்துக் கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றனர்.இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 14 தங்கம்,23 வெள்ளி,29 வெண்கலம் என 66 பதக்கங்களை வென்று இந்தியா பதக்கப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஆடவர் பாய்மர படகு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் வருண் தக்கார்,கணபதிக்கு ரூ.20 லட்சம் ஊக்கப்பரிசு வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க