• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெல்லை மாவட்டத்தில் குற்றச் செயலில் ஈடுபட்ட 87 பேர் குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தகவல்

July 23, 2016 வெங்கி சதீஷ்

நெல்லை, நெல்லை மாவட்டத்தில் குற்றச் செயலில் ஈடுபட்ட 87 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்று மாவட்ட போலீஸ் காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நெல்லை மாவட்டத்தில் கடந்த 2013–ம் ஆண்டில் 4 ஆதாயக் கொலைகள், 2 மத ரீதியான கொலைகள், 4 சாதி ரீதியான கொலைகள் உள்ளிட்ட 105 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2014–ம் ஆண்டில் 3 ஆதாயக்கொலைகள், 12 சாதி ரீதியான கொலைகள் உள்ளிட்ட 108 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2015–ம் ஆண்டில் 4 ஆதாயக் கொலைகள் உள்ளிட்ட 102 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2016–ம் ஆண்டில் 2 ஆதாயக் கொலைகள் உள்ளிட்ட 105 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு வழக்கு தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த வருடம் சாதி மற்றும் மத ரீதியான கொலை வழக்குகள் எதுவும் இல்லை. காதல், கள்ளக்காதல் தொடர்பாக 11 கொலை வழக்குகளும், குடும்ப தகராறு காரணமாக 15 வழக்குகளும், முன்விரோதம் காரணமாக 12 வழக்குகளும், இடப்பிரச்சினை தொடர்பாக 5 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

கடந்த 2015–ம் ஆண்டு நடந்த 23 கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோர்ட்டு மூலம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இந்த வருடம் 6 மாதத்திற்குள் 12 கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனையும், ஒரு வழக்கில் 5 வருடம் சிறை தண்டனையும், ஒரு வழக்கில் 3 வருடம் சிறை தண்டனையும் கோர்ட்டு மூலம் வழங்கப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் 87 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். 2 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க