• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீதிபதிகள் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து உளவுத் துறையிடம் கேளுங்கள்

November 4, 2016 தண்டோரா குழு

நீதிபதிகள் தொலைபேசி ஒட்டுக் கேட்பது குறித்து தில்லி காவல் துறையினர் கேள்வி கேட்டதற்கு, “உளவுத் துறையிடம் (ஐ.பி.) போய்க் கேளுங்கள்” என்று தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

தில்லி உயர் நீதிமன்ற பொன்விழா ஆண்டு சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், நீதிபதிகள் போன் ஒட்டு கேட்கப்படுவதாகப் புகார் கூறினார். மத்திய அரசு இதனை உடனடியாக மறுத்தது.

இந்நிலையில் தில்லி காவல்துறையினர், கெஜ்ரிவாலுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினர். அதில், “நீதிபதிகள் போன் ஒட்டு கேட்கப்படுவதாக சமீபத்தில் புகார் கூறியிருந்தீர்கள். சில நீதிபதிகள் தங்களது போன் ஒட்டு கேட்பதாக நீங்கள் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

உரிய காரணமில்லாமல் போன் ஒட்டுக்கேட்பது தவறு. இதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எந்த சம்பவத்தின் அடிப்படையில், நீதிபதிகள் போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது என நீங்கள் கூறியுள்ளீர்கள்? எந்த தகவல் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகளை கூறியுள்ளீர்கள்?” என்று விளக்கம் கேட்டுள்ளனர்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வர் கெஜ்ரிவால், “டுவிட்டரில்” “உளவுத் துறையான ஐ.பி.யிடம் கேட்க வேண்டும். உங்களுக்குத் தேவையான தகவல்களை அவர்கள் தருவார்கள்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க