• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுமியின் காதினுள் எறும்புகளின் ஆட்சி.

July 8, 2016 தண்டோரா குழு

குஜராத்தில் உள்ள டீசாவைச் சேர்ந்த நாற்பது வயதான சஞ்சய் டர்ஜியின் மகள் ஷ்ரெயா டர்ஜி. 12 வயதான இச்சிறுமியின் காதிலிருந்து எறும்புகள் சாரை சாரையாக வெளிவந்த வண்ணம் இருந்தன.

கடந்த ஆகஸ்டு மாதம் சிறுமி காது குடைச்சலால் அவதிப் பட்டுள்ளார். பாரம்பரிய கை வைத்தியம் பலனளிக்காத காரணத்தினால், சூனியமாக இருக்குமோ என்று அதற்கும் மாற்று செய்துள்ளனர்.

தாங்க முடியாத நிலையில் அவரது தந்தை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். எக்ஸ் ரே, மற்றும் பிற பரிசோதனைகளுக்குப் பிறகு சிறுமியின் காதின் செவிப்பறைக்கு அருகில் ஏராளமான எறும்புகள் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் எறும்புகள் எவ்வாறு, எங்கே உற்பத்தியாகின்றன என்பது புரியாத புதிராகவே இருந்தது.

எறும்புகள் மூச்சு முட்டி இறக்கும் வண்ணம் சொட்டு மருந்துகள் உபயோகப்படுத்தப்பட்டன. ஆயினும் புதிய வரவுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று டாக்டர் ஜவஹர் தெரிவித்தார்.

அவர்கள் வாழும் சுற்றுப் புற சூழ்நிலையும் சுகாதாரமுள்ளதாகவே உள்ளது, அதனால் அவையும் காரணமாக இருக்கமுடியாது. காதினுள் எறும்புகள் முட்டையிட வாய்ப்பில்லை ஏனெனில் ராணி எறும்பு அவ்விடம் காணப்படவில்லை என்றும் கூறினார்.

புகைப் படக் கருவியை உள் செலுத்தி எறும்புகளின் இனப் பெருக்கத்திற்குக் காரணத்தைக் கண்டு பிடிக்க முயன்றுள்ளனர். ஆயிரக்கணக்கான எறும்புகள் ஊர்வலம் வர என்ன காரணம் என்பதைக் கண்டறிய பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

மருத்துவர்களின் தொடர் முயற்சியினால் சிறிது சிறிதாக அவ்வெறும்புகள் அப்புறப்படுத்தப்பட்டன. சிலமுறை ஒரே நாளில் 100 எறும்புகள் வரை கூட அகற்றப்பட்டுள்ளன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 6 மாத சிகிச்சையில் காதிலுள்ள எறும்புகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டன.

இவரது தந்தை தொலைக் காட்சி பெட்டிகளைப் பழுது பார்க்கும் நிறுவனத்தை நடத்துபவர். தனது மகளின் இப்பிரச்சனை முற்றிலுமாக குணமடைவதற்கு கடவுளின் கருணையே காரணம் என்று உணர்வு பொங்கக் கூறியுள்ளார்.

காதினுள் எறும்புகளின் சஞ்சாரம் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்ததாகவும், பலமுறை தான் பள்ளியில் இருக்கும் போது, அல்லது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, எறும்புகள் காதை விட்டு வெளியே ஊர்ந்து வரும் என்றும், அதைக் கண்டு மற்றவர்கள் பயந்து தன்னை ஒதுக்கியதும் உண்டு என்றும் ஷ்ரெயா கூறியுள்ளார்.

ஆனால் தற்பொழுது அத்துன்பங்களிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், விடுமுறைக்கு மாமாவின் வீட்டிற்குச் செல்லப் போவதாகவும் சிறுமி ஷ்ரெயா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க