• Download mobile app
02 Jun 2025, MondayEdition - 3400
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

அமெரிக்காவில் வால்மார்ட் கடையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

November 2, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் தோர்ன்டன் நகரிலுள்ள வால்மார்ட் கடையில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தின் தோர்ன்டன் நகரிலுள்ள பிரபல வால்மார்ட் ஸ்டோரில் இன்று(நவம்பர் 2) காலை ஏராளமான வாடிக்கையாளர்கள் இருந்தனர். அப்போது, அங்கு நுழைந்த மர்ம நபர், தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு, சரமாரியாக சுட்டான்.இதனால் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் பீதி அடைந்து, கடையை விட்டு வெளியேறினர்.

இந்த திடீர் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றொரு பெண் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்தவர்களுடைய உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு காரணமான நபரை விரைவில் கைது செய்வோம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க