• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காற்று மாசு தடுக்க தில்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – அஜய் மக்கான்

November 7, 2016 தண்டோரா குழு

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக தில்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அஜய் மக்கான் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக காங்கிராஸ் தில்லி மாநில தலைவர் அஜய் மக்கான் செய்தியாளர்களிடம் பேசுகையில்

தில்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் முதல்வரோ மாநிலத்துக்கு வெளியே அரசியல் ஆதாயம் தேடும் பணிகளில் ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பாக மாநில அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் குறுகிய கால நடவடிக்கைகளே.

தில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும். இதற்காக நீண்டகால நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் இது குறித்து எதுவும் அறிவிக்காத கெஜ்ரிவால் ஒரு பார்ட் -டைம் முதல்வராக இருந்து வருகிறார். தில்லிக்கு முழுநேர முதல்வர் தேவை என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க