• Download mobile app
19 Jan 2026, MondayEdition - 3631
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

18 ஆண்டுகளுக்குப் பிறகு வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் விடுதலை

August 16, 2016 தண்டோரா குழு

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் சந்தன கடத்தல் வீரப்பனுடைய கூட்டாளிகள் 4 பேரை கர்நாடகா அரசு நேற்று விடுதலை செய்தது.

நமது தேசத்தின் 70வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நன்னடத்தை அடிப்படையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் சிறைச்சாலையில் இருந்து மொத்தம் 348 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

இதில்,வீரப்பனின் கூட்டாளிகளான அன்புராஜ், தங்கராஜ், அப்பர்சாமி, துப்பாக்கி சித்தன் ஆகிய நான்கு பேரும் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.சுமார் 18 ஆண்டுகளாக சேலம், கோவை, மைசூரு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விடுதலை செய்யப்பட்ட வீரப்பனின் கூட்டாளிகள் நால்வரும் கடந்த 1998ம் ஆண்டு தமிழக காவல் துறை தலைவர் காளிமுத்து முன்பாக சரணடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க