• Download mobile app
31 May 2025, SaturdayEdition - 3398
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

நமக்கு விரோதிகளாக இருப்பவர்கள், சமூகத்திற்கும் விரோதிகள் தான் – கமல்

January 23, 2018 தண்டோரா குழு

நமக்கு விரோதிகளாக இருப்பவர்கள், சமூகத்திற்கும் விரோதிகள் தான் என்று நடிகர் கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் நடிகர் கமலஹாசன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் ரசிகர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன்,

“ரசிகர்களை சந்திப்பது வழக்கமானது என்றாலும் தற்போது இலக்கு மாறியுள்ளது. நாம் வெற்றியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் நம் பயணம் மக்களை நோக்கியே, கஜானாவை நோக்கி அல்ல.

மக்களை நோக்கிய பயணம் என்பதால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என கூறுகிறேன். நம் கூட்டத்தில் சாதி என்ன, மதம் என்ன என்ற கேள்வியும் எழுந்தது கிடையாது. இனியும் அப்படித்தான் இருக்கும். இனி நீங்கள் எந்த கட்சி என கேட்டு உறுதி செய்து கொள்வோம். நமக்கு விரோதிகளாக இருப்பவர்கள், சமூகத்திற்கும் விரோதிகள்தான்.

சுவரொட்டியில் எழுதப்படும் வாசகங்களை தலைமையின் அனுமதி பெற்று எழுதுங்கள், கண்ணியம் காக்கப்பட வேண்டும்.நம் கூட்டத்தில் இன்னும் நிறைய பேர் இணைய இருக்கிறார்கள்.அவர்களுக்கு நீங்கள் தான் மூத்தவர்கள்”.இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க