• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“நவம்பர் 20 டெல்லி விரையுங்கள்” -போராட கமல் அழைப்பு

November 16, 2017 தண்டோரா குழு

விவசாயிகளுக்கு கடன்படாதவர் யார்? அவர்கள் குரல் வலுப்பெற செய்யுங்கள் என நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல் கட்சி துவங்கும் முனைப்பில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன். சில தினங்களாக களத்துக்கே சென்று மக்களையும், விவசாயிகளையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.கடந்த சில நாள்களுக்கு முன்பு எண்ணூர் கழிமுகப் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து விவசாயிகளையும் அவர் சந்தித்து பேசினார்.இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு குரல் சேர்க்க வேண்டும் என நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதாகையை கையில் பிடித்தவாறு வெளியிட்ட பதிவில், விவசாயிகளுக்கு கடன் படாதவர் யார்? அவர்கள் குரல் வலுப்பெறச் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் அந்த பதாகையில் நவம்பர் 20 டெல்லி விரையுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க