• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுகவிற்கு ஆதரவா ? கோபத்தில் கவுண்டமணி

December 11, 2017 தண்டோரா குழு

சென்னை ஆர்.கே நகரில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையில்,
நடிகர் செந்தில், தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார் என்றும் அதற்கு எதிராக , ஆர்.கே.நகர் தொகுதியில் , அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, நடிகர் கவுண்டமணி, பிரசாரம் மேற்கொள்கிறார் என செய்தி வெளியானது.

இது குறித்து நடிகர் கவுண்டமணி கூறும்போது,

இன்று ஒரு காலை நாளிதழில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்யப் போவதாக செய்தி வந்துள்ளது. அந்த செய்தி உண்மையல்ல.நான் எந்த கட்சியையும் சாராதவன். அரசியலிலும் இல்லாதவன். நான் எந்த கட்சியையும் ஆதரித்து பிரசாரம் செய்ய வில்லை. என்னை கேட்காமல் அவதூறாக செய்தி வெளியிட்டால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கவுண்டமணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க