October 25, 2018
தண்டோரா குழு
கோவை காவல்துறையில் எட்டு ஆண்டுகளாக பணியில் இருந்த மோப்ப நாய் டயானா உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தது.
கோவை மாநகர காவல்துறையில் மோப்ப நாயாக இருந்த டயானா கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு பணிகளை செய்து வந்துள்ளது.குறிப்பாக திருடர்களை கண்டுபிடிப்பதில் காவல் துறைக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளது.இந்நிலையில் உடல் நலக்குறைவால் மோப்ப நாய் டயானா இன்று உயிரிழந்தது. இதனையடுத்து காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மையத்திலேயே மோப்ப நாய் டயானாவை அடக்கம் செய்து மரியாதை செலுத்தினர்.பல ஆண்டுகளாக மோப்ப நாய் பிரிவில் இருந்த டயானா உயிரிழந்தது காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.