• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகரில் 132 பெண் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள் பதிவு

January 1, 2022 தண்டோரா குழு

கோவை மாநகரில் 132 பெண் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள் பதிவு

செய்யப்பட்டுள்ளன.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் கூறியதாவது:

கோவை மாநகரில் கடந்த 2020-ம் ஆண்டு 69 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதுவே 2021-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி வரை 77 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 2021-ம் ஆண்டு 13 பாலியல் பலாத்கார வழக்குகளும், 8 துன்புறுத்துதல் வழக்குகளும், 5 கடத்தல் வழக்குகளும், 132 பெண் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளும், 27 கொலை வழக்குகளும் பதிவாகி உள்ளன.

மேலும் 18 கலவர வழக்குகளும், 114 கஞ்சா வழக்குகளும், 1,594 புகையிலை பொருட்கள் விற்ற வழக்குகளும் 130 லாட்டரி விற்பனை வழக்குகளும் பதிவாகின.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க