• Download mobile app
18 Apr 2026, SaturdayEdition - 3720
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் பூட்டை உடைத்து 92 சவரன் நகை திருட்டு

August 3, 2016 தண்டோரா குழு

திருப்பூர் தரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். பழைய துணிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று ஆடி அம்மாவாசை என்பதால் வெளியூர் கோவிலுக்கு சென்று விட்டு இரவு திரும்பி வந்து வீட்டைப் பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுத் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூர் ரூரல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய விசாரணையில் வீட்டில் இருந்த 110 சவரன் நகை, 1.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் துப்பு துலக்கி வருகின்றனர்.

மேலும் படிக்க