• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

90 பள்ளி மாணவிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய வழக்கில்தலைமையாசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை

September 19, 2017 தண்டோரா குழு

90 பள்ளி மாணவிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய வழக்கில் தலைமையாசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை புதூர் லூர்து நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி இவர் 2011ல் மதுரை மாவட்டம் பொதும்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த போது 90 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக மதுரை கூடல்புதூர் காவல் நிலையத்த்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரனை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதல்படி 2017 ஜனவரி மாதம் முதல் இந்த வழக்கு விரைவாக விசாரிக்கப்பட்டு இன்று மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு பிரிவு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி 24 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 55 வருட சிறை தண்டனையும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ரூ 3 லட்சத்து 40 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

அதனைதொடர்ந்து குற்றவாளியை போலீசார் நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு கொண்டு செல்லும் போது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள் , பொதுமக்கள் அவர் மீது முட்டை வீசி செருப்பு அடி கொடுத்தனர். இதனால் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க