• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

9 லட்ச லிட்டர் மதுவை எலிகள் தான் குடித்ததாம் – பீகார் போலீஸ் திடுக்

May 5, 2017 தண்டோரா குழு

பீகாரில் பறிமுதல் செய்யப்பட்ட 9 லட்ச லிட்டர் மதுபானங்களை எலிகள் காலி செய்துவிட்டது என்று பீகார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்செய்யப்பட்ட பிறகு 9 லட்ச லிட்டர் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் பீகார் காவல்நிலையத்திலுள்ள கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த மதுபான பாட்டில்கள் காணாமல் போய்விட்டதாக ஊடகங்கள் மூலம் தகவல் வெளியாகியது.பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் உடைக்கப்பட்டிருந்தது.

அதிலிருந்த மதுவை எலிகள் குடித்துவிட்டன என்று சமீபத்தில் பீகாரில் நடந்த மாநில காவல்துறை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதுக்குறித்து கூடுதல் இயக்குனர் ஜெனரல் ஆப் போலீஸ் எஸ்.கே.சிங்கல் கூறுகையில்,

“இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பாட்னா மண்டல ஐ.ஜிக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அவருடைய விசாரணைக்கு பிறகு, இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும் படிக்க