• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இதுவே நல்ல தருணம் -தங்க நகை விற்பனையாளர்

July 28, 2020 தண்டோரா குழு

தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இதுவே நல்ல தருணம் எனவும்,விரைவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ஏழாயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக கோவையை சேர்ந்த தங்க நகை விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணத்தில் பொருளாதாரம் முடங்கி வரும் நிலையில் தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் தற்போது வரை சவரனுக்கு 1,304 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோவையை சேர்ந்த தங்க நகை வியாபாரியான ரகுநாதன் சுப்பையா இன்னும் ஒரு சில மாதங்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ஏழாயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இதுவே நல்ல சந்தர்ப்பம் எனவும், ஏனென்றால் இனி தங்கம் விலை அதிக உயர வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க