• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

8 அடி நீளமுள்ள மலைப்பாம்புக்கு சிடி ஸ்கேன் எடுத்த மருத்துவர்கள்

September 26, 2017 தண்டோரா குழு

ஓடிஸாவில் அடிபட்ட எட்டு அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றுக்கு தனியார் மருத்துவமனையில் சிடி ஸ்கேன் செய்யப்பட்டது.

ஓடிஸா மாநிலத்திலுள்ள கியோன்ஜார் மாவட்டத்தின் அனந்தபூர் நகரம் புவனேஸ்வரிலிருந்து சுமார் 13௦ கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. அங்கு அடிபட்ட எட்டு அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை வனத்துறை அதிகாரிகள் மீட்டு, ஓடிசாவின் Snake Helpline அமைப்பின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிறகு, அதை ஆனந்த்பூர் வனத்துறை அதிகாரி ஒருவர், ஓடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் கால்நடை அறிவியல் கல்லூரிக்கு எடுத்து வந்தார். முதலில் அந்த பாம்பிற்கு எந்த விதமான காயம் ஏற்பட்டுள்ளது என்று கண்டறிய அதற்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. ஆனால், அதன் காயங்கள் சரியாக தெரியவில்லை.

இதையடுத்து, அதன் காயங்களை தெளிவாக அறிந்துக்கொள்ள, கால்நடை மருத்துவர்கள் அதற்கு சிடி ஸ்கேன் செய்ய முடிவு செய்தனர். இந்நிலையில் அவ்வளவு பெரிய பாம்பை அசையவிடாமல் ஒரே இடத்தில் எப்படி பிடித்து வைப்பது? என்று யோசித்தனர்.

இந்த சிக்கலை சமாளிக்க பாம்பின் உடலில் மருத்துவ டேப்பை பயன்படுத்தி அதன் உடலில் ஒட்டினர். அதன் பிறகு, அதற்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதன் உடல் முழுவதிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருப்பதை அந்த ஸ்கேன் மூலம் தெரிய வந்தது. இதை குறித்து சர்வதேச கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையை பெற்ற பிறகு, அந்த பாம்பிற்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க