• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

7 வயது சிறுவனின் கழுத்தில் குத்திய தொட்டி கொக்கி அகற்றம் கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

June 16, 2020 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் 7 வயது சிறுவனின் கழுத்தில் குத்திய தொட்டில் கொக்கியை அகற்றிய டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

திருப்பூர் பாரதிபுரம் பகுதி சேர்ந்த சிவராஜ். இவருடைய மகன் ரிதிக் ஈஸ்வரன். இச்சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் சிறுவன் வீடு அருகே உள்ள ஒரு மரத்தில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்தான். நேற்றுமுன்தினம் சிறுவன் மரத்தில் ஏறி தொட்டி கட்டும் போது எதிர்பாராதவிதமாக மரக்கிளை ஒடிந்து கீழே விழுந்தன. அப்போது கீழே விழுந்த தொட்டி கட்டும் கொக்கி கம்பி அவளது கழுத்து பகுதியில் குத்தி வலது காது வழியாக வெளியே வந்தது. இதனால் இரத்தம் வெளியேறிய சிறுவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக சிறுவனை கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து வந்தனர்.

அங்கு சிறுவனை குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவில் டாக்டர் அனைத்து சிடி ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்தனர். அதில் சிறுவனின் கழுத்து பகுதியில் குத்திய கம்பியானது 12 மில்லி மீட்டர் அகலமும் 2 அடி நீளமும் உள்ள குப்பி கம்பி என்பது தெரியவந்தது. இதையடுத்து,சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். கோவை அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் அறிவுறுத்தலின்படி குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை டாக்டர் ரங்கராஜன் தலைமையில் டாக்டர்கள் தர்மேந்திரா முத்துராமலிங்கம், செந்தில்குமார், சீனிவாசன் மற்றும் மயக்கவியல் துறை தலைவர் ஜெய்சங்கர் நாராயணன் வசந்தி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்.இதில் வெற்றிகரமாக சிறுவனின் கழுத்து பகுதியில் சிக்கியிருந்த கொக்கி கம்பி அகற்றி சாதனை படைத்தனர் தற்போது அந்த சிறுவன் உடல் நிலை தேறி நல்ல நிலையில் உள்ளான் சாதனை படைத்த டாக்டர் குழுவினர் காளிதாஸ் பாராட்டினார்.

மேலும் படிக்க