• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

7 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர் – கோவை மாவட்ட எஸ்.பி. செல்வனகரதினம் தகவல்

November 12, 2021 தண்டோரா குழு

கோவையில் இயற்கை சீற்றங்களில் இருந்து பொது மக்களை காப்பாற்றும் பொருட்டு பேரிடர் மீட்பு படையினர் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி.செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. பருவ மழையை முன்னிட்டு தமிழகத்தில் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் தயார் நிலையில் இருக்கும்படி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து பொது மக்களை காப்பாற்றும் பொருட்டு பேரிடர் மீட்பு படையினர் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட எஸ்.பி.
செல்வனகரதினம் கூறியதாவது:-

கோவை மாவட்ட ஊரக பகுதிகளில் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து பொது மக்களை மீட்க 7 குழுக்கள் தயாராக உள்ளனர். இவர்களுக்கு தேவையான நவீன உபகரணங்களை கூடுதல் டி.ஜி.பி வன்னியபெருமாள் வழங்கியுள்ளார்.

இதில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி சுதாகர் டி.ஐ.ஜி முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மீட்பு படையினர் மழை சேதம் ஏற்படும் உள்ள இடங்களுக்கு அருகில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க