• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

7 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர் – கோவை மாவட்ட எஸ்.பி. செல்வனகரதினம் தகவல்

November 12, 2021 தண்டோரா குழு

கோவையில் இயற்கை சீற்றங்களில் இருந்து பொது மக்களை காப்பாற்றும் பொருட்டு பேரிடர் மீட்பு படையினர் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி.செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. பருவ மழையை முன்னிட்டு தமிழகத்தில் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் தயார் நிலையில் இருக்கும்படி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து பொது மக்களை காப்பாற்றும் பொருட்டு பேரிடர் மீட்பு படையினர் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட எஸ்.பி.
செல்வனகரதினம் கூறியதாவது:-

கோவை மாவட்ட ஊரக பகுதிகளில் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து பொது மக்களை மீட்க 7 குழுக்கள் தயாராக உள்ளனர். இவர்களுக்கு தேவையான நவீன உபகரணங்களை கூடுதல் டி.ஜி.பி வன்னியபெருமாள் வழங்கியுள்ளார்.

இதில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி சுதாகர் டி.ஐ.ஜி முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மீட்பு படையினர் மழை சேதம் ஏற்படும் உள்ள இடங்களுக்கு அருகில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க