• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அர்ஜென்டினா-சிலியில் பலத்த நிலநடுக்கம்

November 21, 2016 தண்டோரா குழு

அர்ஜென்டினா மற்றும் சிலி நாடுகளில் 6.4 ரிக்டர் அளவில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) அன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் ஞாயிற்றுக் கிழமையன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டின் தலைநகரான புஏனோஸ் ஏர்ஸ்ஐ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்து குலுங்கின. அதை தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து அலறியடித்தபடி மக்கள் வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

அர்ஜென்டினாவின் சான்ஜியான் மாநிலத்தை குலுக்கிய பூகம்பம் அந்நாட்டின் உள்ளூர் நேரத்தின் படி 1757 மணிக்கு தாக்கியது. பூமிக்கு அடியில் 130 கிலோ மீட்டர் ஆழத்தில் (80 மைல்) நிலநடுக்கம் உருவானதாக அர்ஜென்டினா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடான சிலியிலும் எதிரொலித்தது. அங்கும் வீடுகள் குலுங்கின. சிலி மற்றும் அர்ஜென்டினாவில் 6.5 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானது என்று தேசிய அவசர நிலை அலுவலக (ONEMI) அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிலி நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள அடகாமா, கோகுலிம்போ, வால்பரைஸோ, ஓ’ஹிக்கின்ஸ், சாண்டியாகோ மெட்ரோ பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.சான்ஜியான் மாகாணத்தில் செல்லுலார் தொலைபேசி சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.

மேலும் படிக்க