• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

57 மணி நேரத்தில் முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

May 19, 2018

கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தும் பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏறப்படுத்தியது. இதுமட்டுமின்றி,எடியூரப்பா தனது மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கபட்டது.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடுகள் நடைப்பெற்ற நிலையில் பாஜக ஆட்சி போட்டியில் இருந்து பின்வாங்கியது.

இன்று மாலை 4 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்கெடுப்பிற்கு முன்னதாக உருக்கமான உறையினை நிகழ்த்திய முதல்வர் எடியூரப்பா, தனது முதல்வர் பதவியினை ராஜினாமா செய்து ஆட்சிப் போருப்பில் இருந்து விலகிக்கொண்டார்.
அவரது இந்த முடிவிற்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி – காங்கிரஸ் கட்சி தலைவர்

“இந்திய மக்களை விட மேலானவர் அல்ல பிரதமர். நாங்கள் கர்நாடக மக்களை காப்பாற்றியுள்ளோம். நாட்டையும் பாஜகவிடமிருந்து காப்போம். நாட்டின் எல்லா நிறுவனங்களையும் கட்டுப்படுத்துவது தான் ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கம். நாட்டில் அதிகாரம் பிரதமராலும் ஆர்.எஸ்.எஸ்ஸாலும் தான் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே கர்நாடகாவின் தற்போதைய ஆளுநர் பதவி விலகினாலும் அடுத்து வருபவரும் இதே வேலையை தான் செய்வார்கள்.

மம்தா பானர்ஜி – மேற்கு வங்க முதல்வர்

ஜனநாயகம் வென்றது. கர்நாடகாவிற்கு வாழ்த்துகள். தேவ கவுடா, குமாரசாமி மற்றும் காங்கிரசிற்கு வாழ்த்துகள். இது பிராந்திய முன்னணியின் வெற்றி.

கமலஹாசன் – மக்கள் நீதி மய்யம்

கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு

மாயாவதி – பகுஜன் சமாஜ்வாதி கட்சி

இது பாஜகவுக்கு விழுந்த பெரும் அடி. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு அவர்கள் வகுத்த அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்து விட்டன.இனியாவது பாஜகவினர் தங்கள் உத்திகளை மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும்.

ப. சிதம்பரம் – முன்னாள் மத்திய அமைச்சர்

“கர்நாடக மாநிலத்தில், பாவம், பொம்மை கவிழ்ந்து விழுந்து உடைந்தது. ஆனால் பொம்மலாட்டக்காரன்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். ஜனநாயகம் பிழைத்தது என்று மகிழ்ச்சி அடைவோம்” .

திமுக – செயல் தலைவர்

உச்ச நீதிமன்ற தீர்ப்பினாலும் சீரிய நடவடிக்கையாலும் கர்நாடகாவில் ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது.

சந்திர பாபு நாயுடு – ஆந்திர முதல்வர்

“ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் இது மகிழ்ச்சியான செய்தி”


வைகோ – மதிமுக பொதுச்செயலாளர்

கர்நாடகாவில் பாஜகவின் குதிரைபேர அரசியலுக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது; தென்னிந்தியாவில் காலூன்றிவிடலாம் என்ற பாஜகவின் எண்ணம் நிறைவேறாது .

கனிமொழி எம்.பி – திமுக எம்.பி

எடியூரப்பா ராஜினாமா ஜனநாயகத்துக்கும் நாட்டு மக்களுக்கும் கிடைத்த வெற்றி; உண்மையான முதல்வராகும் மஜதவின் குமாரசாமிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் வாழ்த்து.

திருநாவுக்கரசர் – தமிழக காங்கிரஸ் தலைவர்

கர்நாடகாவில் ஜனநாயகமும், சட்டமும், தர்மமும் வென்றது மகிழ்ச்சிக்குரியது உச்சநீதிமன்றம் தனது தனித்தன்மை, பெருமையை காப்பாற்றி மக்களிடம் மீண்டும் நம்பிக்கை பெற்றுள்ளது. மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படும் ஆளுநர்களுக்கு கர்நாடக விவகாரம் ஒரு பாடம்

சீமான் – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்

ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் தந்ததால் பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம் என்று பாஜக திட்டமிட்டது; ஆனால் நீதிமன்றம் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டதால் பாஜகவின் திட்டம் பலிக்கவில்லை. கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்களை பாஜகவால் விலைக்கு வாங்க முடியவில்லை.

மேலும் படிக்க