• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

5 சதவீதம் ஊக்கத்தொகை பெற இன்றும், நாளையும் கடைசி வாய்ப்பு கமிஷனர் மு.பிரதாப் அறிவிப்பு

April 29, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய நடப்பு 2023-24ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை 30.04.2023-க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு தங்களது சொத்து வரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். கடைசி வாய்ப்பாக இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இதுதவிர, அந்தந்த வார்டுகளில் சிறப்பு வரி வசூல் முகாம் மேற்கண்ட இரு தினங்களும் நடைபெறுகிறது.

எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, சொத்துவரியை முறையாக செலுத்தி, மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க