• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

4,807 கோடி ரூபாய் கறுப்புப் பணம் பறிமுதல்

January 9, 2017 தண்டோரா குழு

கணக்கில் காட்டப்படாத 4,807 கோடி ரூபாயையும், 112 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து வருமானவரித் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி முதல் 5௦௦ மற்றும் 1,௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மொத்தம் 1,138 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இது தொடர்பாக 5,184 பெருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

6௦9.39 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் மற்றும் 112 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய 2௦௦௦ ரூபாய் நோட்டுகள் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கணக்கில் காட்டப்படாத 4,807 கோடி ரூபாயையும், 112 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளையும் வருமானவரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற பிற விசாரணை அமைப்புகளுக்கு இதுவரை 526 வழக்குகளைப் பரிந்துரை செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க