• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

480 மதுபாட்டில்கள் பறிமுதல்; 10 பேர் கைது

October 16, 2021 தண்டோரா குழு

கோவையில் 480 மதுபாட்டில்கல் பறிமுதல் செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை குனியமுத்தூர், சிங்காநல்லூர், ராமநாதபுரம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு போலீசார் மற்றும் மாநகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட திருச்சி மணப்பாறையை சேர்ந்த சேகர்(23), பெரியசாமி(49), தாமரை செல்வன்(27), கோவை ஒண்டிபுதூரை சேர்ந்த கருப்பையா(44), புதுக்கோட்டையை சேர்ந்த ரவிக்குமார்(47), பாண்டியராஜா(27) உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 480 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க