• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அத்துமீறி போஸ்டர்கள் ஒட்டப்படுவதாக புகார்

March 15, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளம்பர படங்கள் மற்றும் போஸ்டர்கள் ஓட்டுவதற்கு தடை விதித்து ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டு இருந்த நிலையில் தொடர்ந்து அத்துமீறி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் சமீப காலமாக அரசு அலுவலகங்களில் தனியாரின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டு இருப்பது அதிகரித்து இருப்பதாகவும்,அரசு அலுவலகங்கள் மற்றும் சுவர்களில் சுவரொட்டிகள் ஓட்டுவது சட்டத்திற்கு புறம்பான செயல் எனவும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்து அது குறித்து கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில்கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளம்பர படங்கள் மற்றும் போஸ்டர்கள் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும்,மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் தடையை மீறி பலரும் அரசு அலுவலர்களின் வேலைநிறுத்தம்,ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.இதனால் ஆட்சியரின் அறிவிப்பு காற்றில் பறக்க விடப்பட்டு உள்ளதாக புகார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க