• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மும்பையில் இரண்டு துண்டுகளாக இறந்து கிடந்த திமிங்கலம்!

October 25, 2017 தண்டோரா குழு

மும்பை கடற்கரையில் 40 அடி நீளமுடைய திமிங்கலத்தின் உடல் இரண்டு துண்டுகளாக பிளந்து இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் உள்ள கலாபா கடற்கரையில்கடந்த திங்கட்கிழமை (அக் 23),சுமார் 40 அடி நீளமுடைய ப்ரைடே இனத்தை சேர்ந்த திமிங்கிலம் ஒன்றின் உடல் இரண்டாக துண்டுகளாக பிளந்து இறந்து கிடந்தது. இச்சம்பவத்தை பார்த்தவர்கள் உடனடியாக பிஎம்சி அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர்.

தகவல் அறிந்த பிஎம்சி அதிகாரிகள் கலாபா கடற்கரைக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது, 26 அடி நீளமுள்ள பாகம் ஒரு புறமும், 14 அடி நீளமுள்ள மற்றொரு பாகம் மற்றொரு இடத்திலும் இருப்பதை கண்டார்கள்.மேலும், அந்த திமிங்கிலத்தின் உடல் அதிக அளவில் சிதைந்துபோயிருந்தது.

பி.எம்.சி அதிகாரிகள் உடனடியாக தேசிய வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். அந்த அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட சோதனையில், அந்த திமிங்கலம் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பு இறந்திருக்கும் என்றும், கப்பலில் மீது அந்த திமிங்கலம் மோதி காயமடைந்திருக்ககூடும் என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க