• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

38 வயதில் ஆண் குழந்தை பெற்றெடுத்த அதிசய தாய்

June 3, 2017 தண்டோரா குழு

ஆக்ராவில், 18 முறை கருக்கலைந்த நிலையில், 19வது முறையாக, அழகிய ஆண் குழந்தை ஒன்றை, தனது 38வது வயதில் பெண் ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.

உத்தரபிரதேஷ் மாகாணத்திலுள்ள ஆக்ராவின் பர்ஹான் பகுதியிலுள்ள ஹதிகர்ஹி கிராமத்தில் ரஜானி (38). இவருக்கு, 18 வயதில் திருமணம் நடந்தது.ஒவ்வொரு முறையும் அவர் கர்ப்பம் அடையும்போது, ஐந்தாவது அல்லது ஆறாவது மாதத்தில் அவருக்கு கருசிதைவு ஏற்பட்டு விடும். அவருக்கு சுமார் 18 முறை கருசிதைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ரஜானி மற்றும் அவருடைய கணவர் மருத்துவ உதவியை நாடியுள்ளனர். தனியார் மருத்துவமனையின் லேப்ரோஸ்கோப்பி நிபுணர் டாக்டர் அமித் டாண்டன் மற்றும் குழந்தையின்மை நிபுணர் டாக்டர் வைஷாலி ரஜானியை பரிசோதனை செய்தனர். பரிசோதனையின் முடிவில், கருப்பையின் வாயில் மிகவும் பலவீனமாக இருந்தபடியால், குழந்தையை தாங்கமுடியாமல் கருசிதைவு ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடித்தனர்.

கருப்பையில் லேப்ரோஸ்கோபி தையல் போட்டால் மறுபடியும் கருசிதைவு ஏற்படாது என்று முடிவு செய்தனர். ரஜானி மீண்டும் கருவுற்றபோது, அவருடைய மூன்றாம் மாதத்தில் மருத்துவர்கள் லேப்ரோஸ்கோபி தையல் போட்டனர். இதனால், ரஜனிக்கு மீண்டும் கருசிதைவு ஏற்படாமல் இருந்தது. சமீபத்தில் அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையை பிறந்துள்ளது.

இந்த சம்பவம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறக்கூடும் என மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ரஜானி குடும்பத்தினர் மிக உற்சாகமாகக் காணப்படுகின்றனர்.

மேலும் படிக்க