• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

October 25, 2018 தண்டோரா குழு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சத்துணவு ஊழியர்களுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் வழங்குதிடுதல் மற்றும் ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு 3 இலட்ச ரூபாய் பணிக்கொடை வழங்குதல் ஆகிய கோரிக்களை வலியுறுத்தி,தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில்,இதுவரை தமிழக அரசு தங்களை அழைத்து பேசவில்லை எனக் கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும்,தங்கள் பிரதிநிகளை உடனடியாக அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷ்ங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க