• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

30-ம் தேதி மருந்துக்கடைகள் அடைப்பு

May 22, 2017 தண்டோரா குழு

மத்திய அரசின் ஆன்லைன் மருந்து விற்பனை சட்டத்தைக் கண்டித்து தமிழக மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் வரும் 30-ம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மத்திய அரசின் இச்சட்டத்தைக் கண்டித்து தமிழகத்தில் சுமார் 30 ஆயிரம் மருந்துக்கடைகளும் அகில இந்திய அளவில் சுமார் 8 லட்சம் கடைகளும் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாக தமிழக மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வர காரணம், ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை அனுமதிக்கக் கோரி கோரிக்கைகள் எழுந்தன. இதனை அடுத்து மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைத்த கமிட்டி ஆய்வு செய்து ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.

அதன் அடிப்படையில் ஆன்லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க