• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

30 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரின் உடல் கண்டெடுப்பு

August 3, 2017 தண்டோரா குழு

ஜெனீவாவில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஜெர்மன் நாட்டை சேர்ந்தவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 25-ம் தேதி, ஆல்ப்ஸ் மலையின் லாக்கின்ஹோர்ன் என்னும் பகுதியில் 2 பேர் மலை ஏறியுள்ளனர். மலை சிகரத்தை அடையும் சிறிது தூரத்திற்கு முன்னதாக அவர்கள் ஒரு மனிதரின் கை மற்றும் காலணிகளை பார்த்துள்ளனர்.இதுக்குறித்து காவல்துறையினருக்கு தகவல் தந்துள்ளனர். மீட்பு பணியினர் அந்த மலைபகுதிக்கு சென்று, அந்த மனிதருடைய உடலை அங்கிருந்து எடுத்து, பெர்ன நகரின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அந்த உடலை பரிசோதனை செய்ததில் அதற்கு வயது 74 இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே அந்த உடல் கடந்த 1987-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி அல்ப்ஸ் மலையில் ஏறி காணாமல் போனவரின் உடல் என்று தெரிய வந்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில், 1942-ம் ஆண்டு அல்ப்ஸ் மலையில் ஏறி, சுமார் 70 ஆண்டுகள் காணாமல் போன தம்பதியினருடைய உடல் அண்மையில் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க