December 29, 2017
தண்டோரா குழு
3 மாதத்திற்குள் ஆட்சி, அதிகாரங்கள் ஆட்டம் காணத் தொடங்கிவிடும் என எம்.எல்.ஏவாக பதவியேற்ற பின் டி.டி.வி தினகரன் பேட்டியளித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்டசையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். கடந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிட்ட ஜெயலலிதா பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதையடுத்து ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை சபாநாயகர் தனபாலிடம் டிடிவி தினகரன் வழங்கினார்.பின்னர் பேரவை தலைவர் அறையில் டிடிவி தினகரனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் சபாநயகர் தனபால். இதனையடுத்து ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,
சசிகலா தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக. 3 மாதத்திற்குள் ஆட்சி, அதிகாரங்கள் ஆட்டம் காணத் தொடங்கிவிடும். கட்சி மட்டும் அல்ல, தமிழக மக்களும் எங்களுடன் தான் உள்ளனர். குறிப்பிட்ட சிலர் வழிவிட்டால் ஆட்சியை தக்க வைக்க முடியும். 5 அல்லது 6 பேரின் சுயநலமே இவ்வளவு பிரச்சினைக்கு காரணம்; சிலர் வழிவிட்டால் ஆட்சியை தக்க வைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.