• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2ஜி வழக்கில் விடுதலையான ஆ.ராசா, கனிமொழிக்கு பிரமாண்ட வரவேற்பு

December 23, 2017 தண்டோரா குழு

2ஜி வழக்கில் விடுதலையான ராசா மற்றும் கனிமொழிக்கு சென்னையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி கடந்த (டிச 21)ஆம் தேதி தீர்ப்பளித்தார். இதில் முக்கியக் குற்றவாளிகளாகக் குற்றம்சாட்டப்பட்ட திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரையும் நீதிபதி சைனி விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், 2ஜி வழக்கில் விடுதலை பெற்று டெல்லியில் இருந்து இன்று(டிச 23) சென்னை திரும்பிய ராசா மற்றும் கனிமொழியை சென்னை விமான நிலையத்தில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன், டி.ஆர். பாலு பொன்முடி மற்றும் திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

மேலும் படிக்க