• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி திமுக நிமிர்ந்து நிற்கும் – துரைமுருகன்

December 21, 2017 தண்டோரா குழு

2ஜி வழக்கில் விடுதலை பெற்றதன் மூலம் இனி திமுக நிமிர்ந்து நிற்கும் என துரைமுருகன் கூறியுள்ளார்.

நாடே எதிர்பார்த்து காத்திருந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றச்சாட்டுகளை சிபிஐ நிரூபிக்க தவறியதால் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 11 பேரையும் விடுதலை செய்து நீதிபதி சைனி தீர்ப்பளித்தார்.

இந்தநிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன்,

திமுக மீது கலங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்று கெட்ட எண்ணத்தில் தொடரப்பட்டது இந்த வழக்கு. பல்வேறு சூது, சூழ்ச்சிகளை செய்தார்கள். நீண்ட கால வழக்கு வாதத்திற்குப் பிறகு எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இனி எல்லாமே வெற்றிதான். நியாயம் வென்றுள்ளது. பொய் வழக்குகளை போட்டு உடைத்திருக்கிறோம்.இனி திமுக நிமிர்ந்து நிற்கும் மீண்டும் வெல்லும் எனக் கூறினார்.

மேலும் படிக்க