• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்படும் – ரிசர்வ் வங்கி

August 19, 2017 தண்டோரா குழு

புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பணமதிப்பு இழப்பு விவகாரத்தில், ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளிவர இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதுபற்றி ரிசர்வ் வங்கி எதுவும் கருத்துத் தெரிவிக்காமல் இருந்து வந்தது.

இதுதொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில் புதிய 50 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படும்.புதிதாக வெளிவரும் 50 ரூபாய் நோட்டில் சிறப்பம்சமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஹம்பி கோவில் தேரின் படம் இடம்பெறும்.மேலும் ஸ்வச் பாரத் இந்தியாவின் லோகா ஒருபுறம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் பாரம்பரிய பெருமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.மேலும்,பழைய 50 ரூபாய் தொடர்ந்து செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க