• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2533 நிரந்தர தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.19.77 லட்சம் மதிப்பீட்டில் சீருடை

November 3, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் 2533 நிரந்தர தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.19 லட்சத்து 77 ஆயிரத்து 757 மதிப்பீட்டில் சீருடைகள் வழங்கும் பணியினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில்,

‘‘கோவை மாநகராட்சியில் தூய்மை மற்றும் சுகாதாரம் பேணும் வகையில் பணிபுரிந்துவரும் அனைத்து நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு ஆண்டு தோறும் இரண்டு செட் சீருடைகள், காலனி மற்றும் சீருடைகளுக்கான தையற்கூலி ஆகியன வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2021-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதற்கட்டமாக அரசு துறை நிறுவனத்தின் மூலம் 2533 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.19.77 மதிப்பீட்டில் சீருடைகள் வழங்கப்படவுள்ளது,’’என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா, தெற்கு மண்டல உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க