• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அலாஸ்காவில் விமான ஓடுபாதையில் 204 கிலோ டையுள்ள நீர் நாய் கண்டுபிடிப்பு

October 26, 2017 தண்டோரா குழு

அலாஸ்கா நாட்டின் விமானநிலையத்தில் விமான ஓடுபாதையில் இருந்த சுமார் 204 கிலோ எடையுள்ள நீர் நாய் கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுவாக அலாஸ்கா விமானநிலையத்தின் ஓடுபாதையில் பனிக்கரடிகள் அலைந்து திரிவது வழக்கம். ஆனால், நீர் நாய்கள் அங்கு இருப்பது அபூர்வமானது.

அலாஸ்காவின் வடக்கு பகுதியில் உள்ள ஆர்க்டிக் பெருங்கடல் கடந்த திங்களன்று(அக் 23) கடுமையான புயல் ஏற்பட்டது. இந்நிலையில், விமான ஊழியர்கள் ஓடுபாதையில் சுத்தம் செய்துக்கொண்டிருந்தபோது,204 கிலோ எடையுள்ள நீர் நாய் ஒன்றை கண்டுபிடித்தனர்.இதனையடுத்து விமான ஊழியர்கள், விலங்கு கட்டுபாட்டு துறைக்கு தகவல் தந்தனர். உடனே அவர்கள் வந்து அந்த நீர் நாயை அகற்றினர்.

பறவைகள்,பனிக்கரடிகள் போன்ற விலங்குகளை ஓடுபாதையில் விமான ஊழியர்கள் பலமுறை பார்த்துள்ளனர்.ஆனால், நீர் நாய் ஒன்று ஓடுபாதையில் இருப்பதை முதல் முறையாக ஊழியர்கள் பார்த்தது இதுவே முதல் முறை.

மேலும், விலங்குகளின் தாக்குதலால், விமான சேவைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் விமான போக்குவரத்துக்கு துறைக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. என்று விமானநிலையத்தின் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் படிக்க