• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

24 மணி நேர குடிநீர் திட்டம் -கோவை மாநகராட்சிக்கு ஒன்றிய அரசு விருது

December 10, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிக்காக, ஒன்றிய அரசு சார்பில் வழங்கப்பட்ட விருதை, மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா நேற்று பெற்றுக்கொண்டார்.

கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. சூயஸ் நிறுனத்துடன் இணைந்து மாநகரில் 100 வார்டுகளிலும் இத்திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில், மின் ஆளுமையை முன்னெடுத்து சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஒன்றிய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது.இதை,மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா பெற்றுக்கொண்டார்.

மேலும் படிக்க