• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

24 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதைக் கண்டித்து திமுகவினர் போராட்டம்

September 26, 2017 தண்டோரா குழு

சிங்காநல்லூர் பகுதியில் 24 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதைக் கண்டித்து சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் அண்மையில் பெய்த கனமழையால் குளம், குட்டைகள் ஆகியவை நிரம்பியும் கூட கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் தொகுதிக்கு 24 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் குற்றம்சாட்டினர்.

மேலும் இதுகுறித்து பலமுறை மாநகராட்சி ஆணையருக்கு மனுகொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார்.இதினிடையே கோவை மாநகராட்சியின் இந்த போக்கை கண்டித்து திமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 2௦௦க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க