• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டியதை கொண்டாடி மகிழ்ந்த ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்

June 7, 2025 தண்டோரா குழு

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கும் கோவையை சேர்ந்த ஸ்டார்ட் அப் இன்குபேட்டர் நிறுவனமான ஆலமரம், இன்று அதனிடம் வழிகாட்டுதல்கள் பெற்று 23 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முன்னேறி உள்ளதை கொண்டாடும் விதமாகவும், இந்த நிறுவனங்கள் வழங்கக்கூடிய சேவைகள்/பொருட்கள் பற்றி எடுத்துரைக்கவும் ‘ டெமோ டே’ எனும் நிகழ்வை கோவையில் மிக சிறப்பாக நடத்தியது.

இந்த நிகழ்வில் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஜோ ஹோ கார்ப்- பின் (ZohoCorp) இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் ஆலமரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அம்பி மூர்த்தி, பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

இதற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வில் அம்பி மூர்த்தி பேசுகையில், ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர் கடந்த 2022ம் ஆண்டு நிறுவப்பட்டது எனவும், இதன் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.கோ ஜென் எனும் தனது நிறுவனத்தின் உதவியால் இயங்கும் ஆலமரம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான பணி இடத்தையும் வழங்கி உதவி வருகிறதாக கூறினார். இந்த வாய்ப்பை கிராமப்புறங்களில் இருந்து வரும் முதல்-தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு ஆலமரம் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கு வரக்கூடிய பெரும்பான்மையான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அவற்றின் நிதி தேவைகளை தாங்களாகவே பூர்த்தி செய்துகொள்வதாக கூறிய அம்பி மூர்த்தி, ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டரில் தங்கள் ஸ்டார்ட் அப்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை அந்தந்த தொழில்துறையில் நிபுணத்துவம் கொண்ட தொழில்முனைவோர்களிடம் ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் பெற்றுக்கொள்ளும் நல்ல வாய்ப்பை தாங்கள் ஏற்படுத்தி கொடுப்பதாக கூறினார்.

இதுவரை ஆலமரத்தில் 23 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதுபோல பயனடைந்து உள்ளது. அதில் 5 நிறுவனங்கள் பெண் தொழில்முனைவோரால் நிறுவப்பட்டது எனவும், இந்த 23 நிறுவனங்களால் 200க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

‘டெமோ டே’ நிகழ்வு பற்றி அவர் கூறும்போது,

இது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தவும், இந்த நிகழ்வில் பங்கேற்ற முதலீட்டாளர்கள் உள்ளிட்ட விருந்தினர்களிடம் உதவிகளை பெறவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர் ஸ்ரீதர் வேம்பு பேசுகையில், டெமோ டே நிகழ்வில் பங்கேற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கண்டு தான் மிகவும் மகிழ்வதாக கூறினார். அவர்களிடம் உள்ள உயர்ந்த சிந்தனையை பற்றி தான் பெருமிதப்படுவதாகவும் கூறினார். இதுபோன்ற நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டுவதன் மூலம் இவர்களில் இருந்து நமது நாட்டிற்கு பல பில்லியன் டாலர் நிறுவனங்கள் கூட கிடைக்கக்கூடும் என்றார். கோவையில் இயங்கும் ஆலமரம் போல பல ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்படவேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அவரிடம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அரசு எப்படிப்பட்ட உதவிகளை வழங்கவேண்டும் என கருதுகிறீர்கள் என கேட்டதற்கு, அவர் ஏற்கனவே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நலனுக்காக இந்திய அரசு நிறைய வழிமுறைகளை எளிதாக்கி உள்ளது. இதனால் இந்த நிறுவனங்கள் நிறைய பலன் பெற்றுள்ளன.

அரசு வருங்காலத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான பணிகளை மேலும் எளிதாக்கவும், நிதி, கடன் பெறுவது தொடர்பான வழிமுறைகளை எளிதாக்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என அவர் கூறினார்.

மேலும் படிக்க