• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இந்தியர் மரணம்

May 24, 2017 தண்டோரா குழு

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பின்னர், கீழே இறங்கும்போது காணாமல் போன மலையேற்ற வீரர் உயிரிழந்துள்ளார்.

உத்தர்பிரதேஷ மாநிலத்தின் மோரதாபாத் நகரை சேர்ந்தவர் ரவி குமார்(27). இவர் 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை சனிக்கிழமை(மே 2௦) மதியம் 1.28 மணியளவில் வெற்றிகரமாக ஏறியுள்ளார்.

பின்னர், அங்கிருந்து கீழே இறங்கும்போது, 8,2௦௦ மீட்டர் உயரத்திலுள்ள பால்கனி என்னும் இடத்திற்கு வரும்போது சுமார் 15௦ முதல் 2௦௦ மீட்டர் ஆழத்தில் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அவருடைய வழிக்காட்டி லப்கா வோங்க்யா ஷெர்பா என்பவரை ஆபத்தான நிலையிலிருந்து மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், எவரெஸ்ட் மலை ஏற்றத்தின்போது, 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கர் ஒருவரும், ஸ்லோவேகிய நாட்டைச் சேர்ந்த ஒருவரும், ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஒருவரும், இன்னும் அடையாளம் கண்டுபிடிக்காத ஒருவரும் ஞாயிற்றுக்கிழமை எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழந்துள்ளனர்.

“காலநிலை மோசமாக இருப்பதாலும், 24 மணிநேரத்திற்கு மேலாக ரவி காணாமற்போனதாலும், அவர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை” என்று நேபால் மலையேறுதல் சங்க தலைவர், அங் ஷேரிங் ஷெர்பா கூறினார்.

1953ம் ஆண்டு எவரெஸ்ட் மலையேற்றம் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 3௦௦ பேர் உயிரழந்துள்ளனர். மேலும், சுமார் 2௦௦ பேருடைய இறந்த உடல்கள் அங்கு இருப்பதாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க