• Download mobile app
05 Sep 2026, SaturdayEdition - 3860
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இந்தியர் மரணம்

May 24, 2017 தண்டோரா குழு

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பின்னர், கீழே இறங்கும்போது காணாமல் போன மலையேற்ற வீரர் உயிரிழந்துள்ளார்.

உத்தர்பிரதேஷ மாநிலத்தின் மோரதாபாத் நகரை சேர்ந்தவர் ரவி குமார்(27). இவர் 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை சனிக்கிழமை(மே 2௦) மதியம் 1.28 மணியளவில் வெற்றிகரமாக ஏறியுள்ளார்.

பின்னர், அங்கிருந்து கீழே இறங்கும்போது, 8,2௦௦ மீட்டர் உயரத்திலுள்ள பால்கனி என்னும் இடத்திற்கு வரும்போது சுமார் 15௦ முதல் 2௦௦ மீட்டர் ஆழத்தில் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அவருடைய வழிக்காட்டி லப்கா வோங்க்யா ஷெர்பா என்பவரை ஆபத்தான நிலையிலிருந்து மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், எவரெஸ்ட் மலை ஏற்றத்தின்போது, 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கர் ஒருவரும், ஸ்லோவேகிய நாட்டைச் சேர்ந்த ஒருவரும், ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஒருவரும், இன்னும் அடையாளம் கண்டுபிடிக்காத ஒருவரும் ஞாயிற்றுக்கிழமை எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழந்துள்ளனர்.

“காலநிலை மோசமாக இருப்பதாலும், 24 மணிநேரத்திற்கு மேலாக ரவி காணாமற்போனதாலும், அவர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை” என்று நேபால் மலையேறுதல் சங்க தலைவர், அங் ஷேரிங் ஷெர்பா கூறினார்.

1953ம் ஆண்டு எவரெஸ்ட் மலையேற்றம் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 3௦௦ பேர் உயிரழந்துள்ளனர். மேலும், சுமார் 2௦௦ பேருடைய இறந்த உடல்கள் அங்கு இருப்பதாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க