January 1, 2019 தண்டோரா குழு
2019 நாடாளுமன்ற தேர்தல், மக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான மோதலாக இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு விரிவான பேட்டி ஒன்றை இன்று வழங்கியுள்ளார்.
அதில், ராமர் கோவில் விவகாரத்தில் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அவசர சட்டம் தற்போது இயற்ற இயலாது. ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் தாமதப்படுத்தியது. சட்ட நடவடிக்கை முடிந்த பிறகு ராமர்கோவில் தொடர்பான அவசர சட்டம் பற்றி பரிசீலனைகப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் சாமானியர் மற்றும் மெகா கூட்டணி இடையே தான் போட்டி. நான் சாமானியரின் பிரதிபலிப்பு தான். ஆர்பிஐ ஆளுநர் பதவியிலிருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இல்லை. அவர் ஆர்.பி.ஐ. ஆளுநராக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். தமது ராஜினாமா குறித்து 6 மாதங்களுக்கு முன்பே உர்ஜித் பட்டேல் தெரிவித்தார். உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படியே முத்தலாக் அவசர சட்டம் இயற்றப்பட்டது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
துல்லிய தாக்குதல் துணிச்சலான நடவடிக்கை, துல்லிய தாக்குதல் நடத்துவதை 2 முறை தள்ளி வைத்து இருந்தோம். ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. துல்லிய தாக்குதலில் எந்த ராணுவ வீரரும் பலியாகக்கூடாது என உறுதியாக இருந்தேன். துல்லிய தாக்குதல் துணிச்சலான நடவடிக்கை துல்லிய தாக்குதல் நடத்திய வீரர்கள் குறித்து கவலை கொண்டிருந்தேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.